மற்ற நகரங்களில் தற்போது காணப்படும் வடக்கு தெற்கு என்ற (பொருளாதார) பாகுபாடு எதிர்காலத்தில் திருப்பத்தூரில் இருக்கக் கூடாது.
பெங்களூரு, சேலம், சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு இங்கு உள்ள அனைத்து நிறுவனங்களின் தலைமையகமாக அமையவிருக்கும் நான்,
என்னில் உருவாக இருக்கும் தொழில்துறையை பற்றி
திருப்பத்தூரில் அமைக்கப்படவிருக்கும் சிப்காட்டிற்கு, என்னுடைய கருத்து தற்போது நிலை,திருப்பத்தூர், நாட்றம்பள்ளி மற்றும் ஆசிரியர் நகர் சுற்றுவட்டாரத்தில் கார்மெண்ட்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. திருப்பத்தூரில் ஒரு நிறுவனமும் ,ஆசிரியர் நகரில் மூன்று நிறுவனங்களும் நாட்றம்பள்ளி இரண்டு நிறுவனங்களும். தற்போது திருப்பத்தூர் மற்றும் ஆசிரியர் நகர் நேரடியாக குறைந்தபட்சம் 550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முக்கியமான தகவல் இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி புதுப்பேட்டை சேர்ந்தவர்கள். சோமலாபுரம் குசுசிலா பாட்டு ஆண்டியப்பனூர் ,குனிச்சி ஆதியூர் சேந்தன் பெண்கள் தொலைவின் காரணமாக பணிக்கு வர இயலவில்லை, தற்போது நிலையிலேயே வடக்கு மற்றும் தெற்கு என்ற பிரிவின் அறிகுறி தெளிவாகத் தெரிகின்றது.
சிப்காட் இரண்டாக வடக்கு தெற்கு என்று வழங்கும் பட்சத்தில் நகரின் வளர்ச்சி சீராக இருக்கும். எதிர்கால பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தற்போதே களையப்படும்.
இங்கு உழைத்துக் கொண்டிருக்கும் சகோதரிகளுக்கு ,தாய்மார்களுக்கும், குறைந்தபட்ச ஊதியம் கூட கிடைப்பதில்லை என்பதே உண்மை. தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஊதியம் குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றிற்கு 150 முதல் 233வரை , மாதத்திற்கு 4500 முதல் 7000 வரை.
ஆனால் அரசு ஆணைப்படி உழைப்பாளர்களின் குறைந்தபட்ச ஊதியம்
1. டைலர் கிரேட் ஒன் = 345 முதல் 336
2. டைலர் கிரேட் 2 = 339 முதல் 329
3. ட்ரிம்மர் = 331 முதல் 321
4. செக்கர் கிரேட் 1 = 351 முதல் 340
5. செக்கர் கிரேட் 2 = 345 முதல் 336
6. அயர்ன் மேன் கிரேட் 1 = 345 முதல் 336
7. அயர்ன் மேன் கிரேட் 2 = 339 முதல் 329
8. பேக்கர் = 331 முதல் 321
9. ஹெல்பர் = 331 முதல் 321
இத்தனை ஆண்டு காலம் என் மக்கள் கஷ்டப்பட்டது போதும். இனியாவது அனைத்தும் சட்டப்படி நடக்கட்டுமே. இது வரவிருக்கும் அனைத்து துறைகளுக்கும் அடிப்படையாக அமையும். பொருளாதார ஏற்றத்தாழ்வு இங்கே கலைந்தால் தானே சாத்தியமாகும். இல்லையெனில் ஒருபுறம் வளர் மறுபுறம் ஏழ்மையும் காணப்படும்.
நாளை என் விவசாயின் குரல் கொண்டு உன்னை சந்திக்கிறேன்.